84. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலின் பின்னணியும், விடுகதை விடையும்

இன்றைய பதிவு ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலின் பின்னணி பற்றியது. 1945 ஆகஸ்ட் ல் நடத்தப்பட்ட அந்த தாக்குதலுக்கு முன்னர் நிலவிய நிலைமைகளை வரலாறு.காம் சென்று தெரிந்து கொள்ளலாம்.
பியர்ல் துறைமுகத் தாக்குதல்
அது 1941 வது வருடம். ஜப்பான் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேரம். இந்த சூழலில் அமெரிக்கா தனது சந்தேகக் கண்களால் ஜப்பானை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. ஜப்பான் தனது எல்லைகளைக் கடந்து ஆசியாவிற்குள் ஊடுறுவத் துவங்கிய நேரம். அது பிலிப்பைன்ஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி இருந்தது. அமெரிக்காவிற்கும், ஜப்பானிற்கும் இடையே எரி பொருள் எண்ணைய் ஏற்றுமதியில் ( அங்கேயும் தான் )சில பிணக்குகள் நிலவி வந்தது. மேலும் அமெரிக்கா ஜப்பானின் ஆதிக்கத்தை ஆசியப் பகுதிகளில் குறைக்க நினைத்தது. எனவே அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வேல்ர்ட் தனது படையை பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலை கொள்ள ஏற்பாடு செய்தார். (பிலிப்பைன்ஸில் நடந்தவை தனிக் கதை). அதற்காக தனது படைக்கலன்களை ஹவாய்க்கு அருகில் இருந்த பியர்ல் துறைமுகத்தை நோக்கித் திருப்பி இருந்தது.இது ஜப்பானை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. அமெரிக்கா தன்னைத் தாக்க ஆயத்தம் செய்வதாகவே இதை ஜப்பான் எண்ணியது.எனவே தான் முந்திக் கொள்வது என்று தீர்மானித்தது.
Captain Mitsuo Fuchida தலைமையிலான திறமை வாய்ந்த ஒரு வான் படை போர்க்குழு இந்த தாக்குதலை நடத்தியது. பியர்ல் துறைமுகத்தை முற்றிலும் சிதைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த தாக்குதல் மூன்று கட்டமாக ஏற்பாடு செய்யபப்ட்டது. இதன் தாக்குதல்கள் ஓஹு (OHAU) மாகாணத்தில் இருந்த போர் தளங்களைக் குறி வைத்து இருந்தன.
முதல் தாக்குதல்

இதில் மொத்தம் 189 விமானங்கள் பங்கு பெற்றன. இதன் குறிகள் துறைமுகத்தில் இருந்த போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் தகர்ப்பதுவே.மூன்று குழுவாக வந்த இந்த விமானங்கள் தங்களது இலக்குகளை சரமாரியாக அழித்து தாக்கின. இந்த நிலையில் அமெரிக்க படைகளால் எதிர் தாக்குதலைத் தொடுக்க இயலவில்லை.
இரண்டாம் தாக்குதல்
இதில் 174 விமானங்கள் பங்கு பெற்றன. இவற்றின் தாக்குதல் முழுவதும் பியர்ல் துறைமுகத்தைத் தகர்ப்பதும், விமானந்தாங்கிகளை அழிப்பதும், Ford Island, Hickham Field, Wheeler Field, Barber’s Point, Kaneohe போன்ற இடங்களைத் தகர்ப்பதுமாக இருந்த்து. இதில் அமெரிக்கப் படைகள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தின. ஆனாலும் பியர்ல் துறைமுகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
மூன்றாவது தாக்குதல்
மூன்றாவது தாக்குதல் அமெரிக்கா படைகளின் எண்ணைய் இருப்புகளைக் குறி வைத்து இருந்தது. ஆனால் இரண்டாவது தாக்குதலில் அமெரிக்கா உஷாராக இருந்து இரண்டாவது தாக்குதலில் ஈடுபட்ட சில விமானங்களை சுட்டு வீழ்த்தியது. மேலும் இரண்டாவது தாக்குதல் முடிந்து திரும்பிய போது இரவாகி விட்டிருந்தது. எனவே அடுத்த தாக்குதல் கைவிடப்பட்டது.
பாதிப்புகள்
இந்த சரமாரியான தாக்குதலில் 2 போர்க்கப்பல்கள்,188 விமானங்கள் உள்ளிட்ட பலத்த அழிவுக்குள்ளானது. 6 போர்க்கப்பல்கள், 155 போர் விமானங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது. மேலும் 2300 + போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். 1200 + போர் வீரர்கள் காயமடைந்தனர். பொது மக்கள் 55 பேர் கொல்லப்பட்டனர். ( அவை ஜப்பானிய தாக்குதல்களால் இல்லை. துறைமுகம் வெடித்துச் சிதறியதால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு).
இது நடந்த பிறகு அமெரிக்காவால் அடுத்த கட்ட நடவடிக்கை எதும் எடுக்க இயலவில்லை. ஒரு ரவுடியை அவனது வீட்டுக்குள் வந்து குமுறி விட்டுச் சென்ற நிலையில் தான் அமெரிக்கா இருந்தது.அதற்கு அடுத்த சில ஆண்டுகள் பழி வாங்க அமெரிக்கா காத்திருந்தது. அது 1945 ஆகஸ்டில் நிறைவேறியது. இந்த அணுகுண்டு தாக்குதலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த பியர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு பழிக்குக் பழி வாங்குவதே முக்கியமாக இருந்தது.
( முந்திய பதிவு பார்க்க)
ஈவு இரக்கம் ஏதுமின்றி நடத்தப்பட்ட அந்த தாக்குதல் தான் உலக மக்களுக்கு இழைக்கப்பட்ட அதிரடியான கொடூரத் தாக்குதல்.

இனி விடுகதைக்கு வருவோம். அமெரிக்கா என்பது உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது தான். தலைப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த தலைப்பு கொடுத்தேன்.(எனக்கும் இது வியாதியாகி விட்டது).
வரலாறு.காம்லிருந்து பின்னூட்டமிட்ட சகோதரர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். ஆனந்த விகடனில் ஹாய் மதன் பகுதியில் தமிழர்களின் வரலாறு விவாதப் பொருளாக்கப்பட்ட போது வரலாறு.காம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் கணிணி அறிவு மற்றும் வாய்ப்பு இல்லாததால் அது நிறைவேறவில்லை. ஆனால் இந்த பின்னூட்டம் பார்த்த உடன் அதை சென்று பார்த்தேன். உங்களுடைய முயற்சி தொடர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள். எனது முந்தைய பதிவை எழுதுவதற்கு முன் அது தொடர்பான எந்த பதிவையும் பார்க்கவில்லை. ஆனால் தகவல்கள் மட்டும் சேகரித்தேன். ஆனால் இப்போது பார்த்த போது வரலாறு.காம் ல் ஹிரோஷிமா பற்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்து நடைக்கும், என்னுடைய எழுத்து நடைக்கும் சில ஒற்றுமை காணப்படுகிறது. ( காப்பி அடிக்கலைங்க) ஒரே நேர் கோட்டில் பயணிக்கக் கூடியவர்கள் என்பதால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்கலாம். நன்றி.

1 comments:

said...

விடையையே ஒரு அழகான பதிவாக போட்டுட்டிங்க....கலக்கல் ;))