அடிவான விளிம்பில்
கண்கொள்ளா நிறங்களைக்
கொட்டி வைத்திருக்கும்
இந்தச் சூரியன் தான்
தகிப்பாய்த் தகித்தது
இன்றைய முற்பகலில்..
பூக்கள் மிதக்க
உதடு சுழித்து
புன்னகைத்தோடும்
இந்த நதியில்தான்
அன்று மிதந்து வந்தது
குழந்தையின் பிணமொன்று...
பொங்கியும் புரண்டும்
மகிழ்ச்சி துள்ள ஓடிவந்தும்
அடிவருடிப்போகும்
அலைகள் தான்
பலி கொண்டன
பல்லாயிரம் உயிர்களை.....
என்றாலும்...
வெறுத்து விடவோ
ரசிக்காதிருக்கவோ
முடியவில்லை
சூரியனை..
நதியை..
அலைகளை...
உன்னையும்!
அன்பின் மொழி - காயத்ரி அக்கா
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment