ஜெயிச்சோம்ல.. ஜெயிச்சோம்ல...

நான் இப்ப புதுசாக வேலைக்கு சேர்ந்து இருக்கும் இடத்தில் தென் ஆப்பெரிக்கர்கள் அதிகம். இன்று இந்தியாவிற்கும் தென் ஆப்பெரிக்காவிற்க்கும் நடந்த கிரிகெட் போட்டி 6 தெ. ஆ., 5 இந்தியர்கள்(நான் உட்பட), ஒரு அமெரிக்கன், 2 கனடா, 1 நைஜிரியன் உடன் பார்க்க நேர்ந்தது.

இந்தியாவால் மிக குறைந்த ரன்கள் தான் எடுக்க முடிந்தது 20 ஒவர்களில்.(153/5). அதனால் இந்தியர்களை தவிர மற்ற அனைவரும் தெ.ஆ. வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். குறைந்த ரன் ஆக இருந்த போதிலும், இந்தியா தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் இந்தியாவிற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த நாங்கள் வழக்கம் போல இந்தியா வெற்றி பெறும் என்று தெ.ஆ. பேட்டிங் செய்வதற்கு முன்பே அடித்து சொன்னோம்.. எங்கள் சொல்லை மெய்ப்படுத்தி காட்டினார் ஆர்.பி. சிங்.(4-0-13-4)

5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள். அவர்கர் சொன்ன வாக்கை பொய்க்காகி எங்களை பெருமிதம் படும்படி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்....

பாகிஸ்தானை வென்றதை விட தெ. ஆ. வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

வாழ்த்துக்கள் பல... கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க.. நல்லாவே இருங்க....



இதன் மூலம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன... இதன் மூலம் தெ. ஆ. விற்கு அரைஇறுதி கனவு ஆப்பு அடிக்க பெற்றது...


http://tsivaram.blogspot.com/2007/09/blog-post_21.html

2 comments:

said...

ஆஹா... நமக்கு எல்லாம் லிங்க் கொடுத்து இருக்கீங்களே...

யாருங்க நீங்க....

நன்றி...

said...

//ஆஹா... நமக்கு எல்லாம் லிங்க் கொடுத்து இருக்கீங்களே...//
சங்கத் தலைவரே நீங்கதானே தலைவரே!