///ஆசிரியையின் விளக்கம், அன்பு நேயர்களே! தமிழ் மண நேயர்கள் அனைவரும் ஆட்டத்தின் மீது கொண்ட ஆர்வம் மற்றும் பதட்டத்தில் மைதானத்தை சேதப்படுத்த தொடங்கி விட்டதால் நேரடியாக கதையின் கடைசி கட்டத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது////
இப்போது நாம் ஆட்டத்தின் கடைசி தருணத்தில் இருக்கிறோம். இதுவரை சிவப்பு அணி 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இது ஆட்டத்தின் கடைசி ஓவர்
சிவப்பு அணி வெற்றி பெற 8 ஓட்டங்கள் வேண்டும்
வெள்ளை அணி வெற்றி பெற ஒரே ஒரு விக்கெட்டைச் சாய்த்தால் போதும்.
பெண்கள் அணியில் கடும் குழப்பம் நிலவுகிறது. ஆட்டம் சுவாரஸ்யமாகவும், மக்கள் அனைவரும் ரசிக்கும் படியும் சென்று கொண்டிருக்கிறது. மழை வேறு வருவேன் மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நம்முடைய இலட்சியம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற பதட்டத்தில் அனைவரும் இருக்கின்றனர். இதற்கிடையே கண்மணி டீச்சரிடம் வந்து கிச்சுவும், பிச்சுவும் சாக்லேட் கேக்க கைப் பையில் சாக்லேட் பூராவும் கானோம். பார்த்தால் G3 க்கு பக்கத்தில் சாக்லேட் கவர் மட்டும் கிடைக்கிறது.
சிவப்பு அணியில் செல்லா 18 ரன்களுடனும் சிவா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சிவப்பு அணியில் அதிகபட்சமாக ரவி 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி மற்றும் ஆறாவது ஓவரை வீச மின்னுது மின்னல் வருகிறார். அதிவேகப் பந்துவீச்சாளரான மின்னல், ரவி போல எல்லைக் கோடு வரை செல்லாமல் கொஞ்ச தூரத்தில் இருந்தே ஓடி வந்து மணிக்கு 140 முதல் 160 கி.மீ வரை வேகத்தில் பந்து வீசக் கூடியவர்.
ஆறாவது ஓவர் முதல் பந்து மின்னல் டு சிவா
வெற்றி பெற 6 பந்தில் 8 ரன் தேவை
இப்போது மழை பெய்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெள்ளை அணி வெற்றி பெறும். ஆப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே வீசப்பட்ட பந்து. அதை ரவி பாயிண்ட்டில் அடிக்க அங்கே டீப் பாயிண்டில் இருந்த அபி அப்பா எடுத்து கீப்பர் தேவிடம் எறிகிறார். ஒரு ரன் மட்டுமே
ஆறாவது ஓவர் இரண்டாவது பந்து மின்னல் டு செல்லா
வெற்றி பெற 5 பந்தில் 7 ரன் தேவை
இப்போது வானத்தில் கருமேகங்கள் நன்றாக திரண்டிருக்கின்றன. மழை வர வாய்ப்பு அதிகமாகி வருகிறது. இந்த பந்தை மின்னல் யார்க செய்ய முயற்சிக்கிறார். ஆனால் செல்லா விலகி நன்றாக அறை எடுத்து ( அதாங்க Makes his room) அடிக்க முற்ப்பட பந்து நான்காவது விலகல் வழியாக 4 ஓட்டங்களைப் பெற்றுத் தருகிறது.
மகளிர் அணியினரின் முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது. கண்மணி டீச்சர் நேராக காயத்ரியிடம் வருகிறார்.
க.டீ : காயத்ரி இப்பயும் ஒன்னும் கெட்டுப் போகலை. நீ நினைத்தால் இந்த ஆட்டத்தை நிறுத்தலாம்
கா : நம்ம சங்கத்தோட கொள்கையே அதுதான என்ன செய்யனும்னு சொல்லுங்க
க.டீ : நீ ஒரே ஒரு கவுஜய எடுத்து விடு. மழைக் கொட்டோ கொட்டுனு கொட்டி ஆட்டமே இல்லாம செய்திடலாம்
வித்யா கலைவாணி : டீச்சர் நான் வேணா பாடவா
கா : ஏய்! முந்திரிக்கொட்டை சும்மா இரு ( கண்மணி டீச்சரிடம்) சரி டீச்சர்
ஆறாவது ஓவர் மூன்றாவது பந்து மின்னல் டு செல்லா
வெற்றி பெற 4 பந்தில் 3 ரன் தேவை
இப்போது மழை பெய்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சிவப்பு அணி வெற்றி பெறும். ஆட்டம் முக்கியமான கட்டத்தை எட்டி விட்டது.
மின்னல் அடுத்த பந்தை வீச தயாராகி ஓடி வருகிறார்.
காயத்ரி கவிதை பாடத் தயாராகிறார்.
"ஒரு கனவைப்போல்-
காலம் நம்
நினைவுகளிலிருந்து
தப்புகிறது
ஏறுவெயிலிடை
பனித்துளி போலவும்...
கடந்த எதிர்
இரண்டுக்குமிடையே
நுரைத்தெழும்புகிறது
வாழ்வின் மீதான பெருவிருப்பு”
மின்னல் இந்த பந்தை இன் ஸ்விங் செய்ய இம்முறையும் செல்லா பின் கால் (பேக் புட்) செய்து மீண்டும் ரூம் போட்டு அடிக்க முற்பட பந்து செல்லாவின் வலது கால் காப்பில் படுகிறது. வெள்ளை அணி வீரர்கள் அனைவரும் ஒரே குரலில் சத்தமிடுகின்றனர். கோபி மட்டும் கூவுகிறார். “How is that” நடுவர் 2 அவுட் என்று கையைத் தூக்கி விரலைக் காட்டுகிறார். வெள்ளை அணி வீரர்கள் அனைவரும் ஹே என்று கத்திக் கொண்டு குதிக்க மைதானமே அதிரும் வண்ணம் ஒரு குரல் கேட்கிறது.
“ யாரும் அவங்கவுங்க இடத்தை விட்டு நகரக்கூடாது “
காயத்ரி மட்டும் கவிதையை தொடர்ந்து பாடுகிறார்
வாழ்வைச் சுவாரசியமாக்கும்
உத்திகளிலொன்றாய்
சிப்பி சேர்க்கத் தொடங்கி
சிப்பிகள் சேகரித்தலே
வாழ்வாகியிருக்கிறது இப்போது....
சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது வானம்
குரல் கொடுத்தது நம்ம செல்லா.
செல்லா : (சத்தமாக) யார ஏமாத்தலாம்னு பாக்குறீங்க. நான் யார் தெரியும்ல. இந்த மைதானத்தில இருக்கிற எல்லாரோட ஜாதகமும் என் கைல. எல்லாரோட ஐடி பாஸ்வேர்டும் என் கைல. அராஜகம் பண்ணலாம்னு பாக்கிறீங்களா?
நடுவர் 2 : இங்க பாருங்க செல்லா
செல்லா : எங்கயும் பாக்க முடியாது போப்பா
அண்ணாச்சி: என்னலே இப்படி தங்கு தங்கு குதிக்க. ஒனக்கு இப்ப என்ன செய்யனும்னு சொல்லும்வே
செல்லா : பந்து என் பேட்ல பட்டுட்டுதான் கால்ல பட்டுச்சு. அதனால நான் அவுட் இல்லை.
அண்ணாச்சி பரிதாபமாக நடுவர் 2 ஐப் பார்க்க அவர் விட்டால் அழுது விடுவது போல நிக்கிறார்.
அண்ணாச்சி commantary box ஐப் பார்த்து கையால் கட்டம் போடுகிறார்
மூன்றாவது நடுவர் நிலா தெளிவாக தன் பொக்கை வாய்ச் சிரிப்புடன் action replay பார்க்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு தன் அருகில் இருக்கும் பட்டனை அழுத்துகிறார்
காயத்ரி கவிதையை தொடர்கிறார்
உள்ளங்கைக் குழிவிற்குள்
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி
ஆழ்ந்தும் அகண்டும்
ஆகிருதி காட்டியும்
அலையடிக்கும் சமுத்திரச் சப்தம்
கேட்டபடியிருக்கிறது
சங்குகளுக்குள்ளும்.....
டிஜிட்டல் போர்டில் “Not out” என வருகிறது. அதே நேரம் மழை கொட்ட ஆரம்பிக்கிறது. மைதானம் தார்ப்பாயால் மூடப்படுகிறது.
காயத்ரி கவிதையை தொடர்கிறார்
எது எப்படியிருந்தென்ன?
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ளவென
என்ன இருக்கிறது?
மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் வித்யா கலைவாணி எப்படியாவது இவ்வளவு பேர் இருக்கும் மைதானத்தில் பாடியே ஆக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
நேராக வர்ணனையாளரின் அறைக்குச் சென்று மைக்கைப் பிடுங்கி அப்போது தான் தனது மனதில் உதித்த கவிதையைப் பாடுகிறார்
?????????????????????????????????????????????????????
???????????????????????????????????????????????????????
????????????????????????????
?????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????????????
???????????????????????????????
??????????????????????????????????????????
???????????????????????????????????
??????????????????????????????????????????
??????????????????????????????????????????
மைதானத்தில் இருந்த ப.பா.சங்கம் , மற்றும் வ.வா. சங்கம் உட்பட அனைவரும் இந்த கவிதையைக் கேட்டவுடன் உயிர் பிழைத்தால் போதும் என்று தலை தெறிக்க ஓடுகின்றனர். பாடல் முடியும் போது மழை மேகம் கூட ஓடி விடுகிறது.மைதானமே காலியாக இருக்கிறது
ஆனாலும் மைதானத்தின் நடுவில் ஒருவர் மட்டும் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுகிறார். வித்யா அங்கே சென்று பார்த்தால் அது நம்ம G3
G3 : வித்யா! கோபியும், லக்கியும் இந்த ஆட்டத்தில ஜெயிச்சா KFC ல ட்ரீட் தர்றதா சொன்னாங்க . சரி யார் ஜெயிச்சாலும் KFC இருக்குன்னு நினைச்சேன். அய்யோ எல்லாம் போச்சே
வித்யா : கவலைப் படாதீங்கக்கா,. யாம் இருக்க பயமேன். நான் KFC ல எடுத்துத் தர்றேன். என்று அழைத்து மைதானத்தை விட்டு வெளியே வருகிறார்.
இப்போது கேமரா பின்னோக்கி.. பின்னோக்கி.. பின்னோக்கி.. பின்னோக்கிப் போக அவர்கள் இருவரும் சிறு புள்ளியாகத் தெரிகிறார்கள்.
டிஸ்கி : இவ்வளவு பெரிய பதிவை போட்ருக்கேன், இதுக்கும் டிஸ்கி போட வேண்டி இருக்கே! என்னோட கவிதை ஏன் கேள்விக் குறியா இருக்குன்னா அதைக் கேட்டவுடன் எல்லோரும் மைதானத்தை விட்டு ஓடுன மாதிரி நீங்களும் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடக்கூடாதுல்ல. அதனால பின்னூட்டம் போட்டுட்டு போங்க, இல்லை இக்கவிதை உங்க வீடு தேடி இ மெயில் கொசு மெயில் சென்னை மெயில் எல்லாத்திலயும் வரக்கூடும்.

4 comments:
8 பல் இருந்தும் பொக்கை வாய் என்று மூன்றாவது அம்பையரை குற்றம் சொன்ன கலைவாணிக்கு இந்த போட்டியின் மூலம் கிடைத்த பின்னூட்டத்தில் 50% அபராதமாக விதிக்கிறேன்(50% பின்னூட்டமும் பாப்பா பதிவுக்கு உடனே வந்தாகனும்)
யக்கோவ் முடிஞ்சிடிச்சா!!
நீங்க எப்பவும் மாதிரி களவாண்டு பதிவு போடுங்க அப்பதான் நிறைய வெரைட்டி கிடைக்கும்!!
யக்கோவ்..கலக்கலாக இருந்திச்சி... ;))
மங்களூர் சிவா said...
யக்கோவ் முடிஞ்சிடிச்சா!!
நீங்க எப்பவும் மாதிரி களவாண்டு பதிவு போடுங்க அப்பதான் நிறைய வெரைட்டி கிடைக்கும்!!
ரிப்பிட்டெய்...
Post a Comment